செய்திகள்,திரையுலகம் நடிகை வீட்டில் தீ விபத்து!…

நடிகை வீட்டில் தீ விபத்து!…

நடிகை வீட்டில் தீ விபத்து!… post thumbnail image
மும்பை:-மும்பை அந்தேரி மேற்கு பகுதி ஹரே ராம் ஹரே கிருஷ்ணா தெருவில் இந்தி நடிகை ஷில்பாசெட்டியின் பங்களா உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஷில்பாசெட்டியின் பங்களாவில் மின் கசிவு காரணமாக முதல் மாடியில் உள்ள ஒரு அறை தீப்பிடித்து எரிந்தது.

அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த நடிகை ஷில்பாசெட்டியின் தந்தை எஸ்.பி. செட்டி அலறி அடித்துக் கொண்டு எழுந்தார். உடனே அவர் ஜுகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். மேலும் மற்ற அறைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

ஆனால் தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த மரச்சாமான்கள் உள்பட பொருட்கள் எரிந்து நாசமாகின.தீ விபத்து ஏற்பட்ட போது நடிகை ஷில்பாசெட்டி வீட்டில் இல்லை. அவர் படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர் சென்றிருந்ததாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி