அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…

நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…

நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!… post thumbnail image
நியூடெல்லி:-வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி ஒன்றில் பாரதிய ஜனதாவை சேர்ந்த டீனா சர்மா என்ற பெண் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இஜாஸ்கானும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென உணர்ச்சி வசப்பட்ட டீனா சர்மா, இஜாஸ்கான் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த டீனா சர்மா பாஜகவில் இருந்து விலகி, ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து பின் மீண்டும் பாஜகவில் இணைந்தவர். இவரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இஜாஸ்கானும் பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்து நேரடி ஒளிபரப்பில் விவாதித்து கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இஜாஸ் கான், டீனா சர்மாவை பெண் என்றும் பார்க்காமல் தவறான வார்த்தையில் திட்டினார்.

இதனால் கடுங்கோபம் கொண்ட டீனாசர்மா, பளாரென கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தை நேரடி ஒளிபரப்பில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்த்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொலைக்காட்சி நிறுவனம், நேரடி ஒளிபரப்பை நிறுத்தியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி