அரசியல்,செய்திகள் தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…

தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்…

தனியாக இருந்த பெண்ணை வீடு புகுந்து கற்பழித்த மந்திரியின் சகோதரர்… post thumbnail image
மும்பை:-மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத கட்சியின் சார்பில் மந்திரியாக பதவி வகிப்பவர் சசிகாண்ட் ஷிண்டே.

இரவு நேரத்தில் வீடு புகுந்து 33 வயது மதிக்கத்தக்க பெண்ணை கற்பழித்த புகாரின் பேரில் இவரது சகோதரர் ருஷிகாண்ட் ஷிண்டேவை சதாரா மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
சதாரா நகரின் அருகேயுள்ள வதே பகுதியில் தனியாக வசித்து வந்த அந்த பெண்ணை வெகு நாட்களாக நோட்டமிட்டு வந்த ருஷிகாண்ட் ஷிண்டே, நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து பலவந்தமாக கற்பழித்து விட்டார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, ருஷிகாண்ட் ஷிண்டேவை இன்று கைது செய்த போலீசார் சதாரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 21-ம் தேதி வரை விசாரணை காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி