செய்திகள்,விளையாட்டு சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது இந்தியா…

சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது இந்தியா…

சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றி மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது இந்தியா… post thumbnail image
சோச்சி:-ரஷ்யாவின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதியன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அதில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள் தாய்நாட்டின் கொடியின் கீழ் அணிவகுத்துச் செல்லாமல் சர்வதேச ஒலிம்பிக் கொடியின் கீழ் சென்றனர்.

ஊழல் கறை படிந்த பொது செயலாளர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதினால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை தடை செய்திருந்தது. இதனால் இந்தியக் கொடியை வீரர்கள் துவக்க நாளன்று பயன்படுத்தமுடியவில்லை.கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு புதிய பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டபின் கடந்த 11 ஆம் தேதியன்று ஒலிம்பிக் கமிட்டி இந்தியா மீதிருந்த தடையை விலக்கியது. தடை நீக்கப்பட்டதால் சோச்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இந்தியா மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்தது. இதன்மூலம்,சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுபட்டுள்ள உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 88 ஆக மாறியுள்ளது. மேலும், இறுதி நாளன்று இந்திய வீரர்கள் இந்திய தேசியக் கொடியினை ஏந்திச் செல்லவும் முடியும்.

இது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு விஷயம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிபராகவும்,உலக ஸ்குவாஷ் சம்மேளனத்தின் தலைவராகவும் இருக்கும் என்.ராமச்சந்திரன் தெரிவித்தார். 15 மாதங்களாக தடை செய்யப்பட்டபின்னர் சங்கத் தேர்தல் முடிந்த இரண்டாவது நாளே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இணைந்துள்ளது நம்பமுடியாதது என்று அவர் கூறினார். இந்த விரைவான முடிவிற்காக ஒலிம்பிக் கமிட்டித் தலைவரான தாமஸ் பக்கிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.சிறிய விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டிகளைப் பார்க்க வந்திருந்த சில இந்திய ரசிகர்களும் கலந்துகொண்டனர். இந்தியக் குளிர்காலவிளையாட்டுகளில் இது ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க உள்ளதாக துப்பாக்கி சுடும் வீரரான சிவா கேசவன் அப்போது குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி