செய்திகள் காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…

காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்…

காதலியின் தந்தை மீது ஆசிட் வீசிய வாலிபர்… post thumbnail image
ஆக்ரா:-உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள காக்ரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை யோகேஷ் என்ற வாலிபர் காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்த யோகேஷ், நேற்று மாலை அப்பெண்ணின் விட்டிற்கு சென்றுள்ளார்.

என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், உன்னை கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன் என்று காதலியிடம் ஆத்திரத்துடன் யோகேஷ் கூறியுள்ளார்.நிலைமையை உணர்ந்த அப்பெண்ணின் தந்தை, அவளை ஒரு அறையில் அடைத்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ், தான் கொண்டுவந்த அசிட்டை பெண்ணின் தந்தை மீது விசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

இதுதொடர்பாக யோகேசை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பா.ஜனதா மகளிரணியினர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி