செய்திகள் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை…

ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து கம்ப்யூட்டர் வாங்க சென்ற இளைஞனுக்கு அடி உதை… post thumbnail image
டொரண்டோ:-டொரண்டோவில் உள்ள 25 வயது இளைஞர் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்க விரும்பினார். ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை பார்த்த அந்த இளைஞர், அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்று கம்ப்யூட்டர் வாங்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

அந்த இளைஞரிடம் இரண்டு நபர்கள், விற்பனை செய்யவேண்டிய கம்ப்யூட்டர் வீட்டில் இருக்கிறது என்றும், தங்களுடன் வந்தால் கம்ப்யூட்டரை காண்பிப்பதாகவும் கூறி அழைத்து சென்றனர். காரில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென ஒதுக்குப்புறமாக காரை நிறுத்திய அந்த மர்ம நபர்கள், டொரண்டோ இளைஞரை அடித்து உதைத்து, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு அந்த இளைஞரை விரட்டிவிட்டனர்.

படுகாயங்களுடன் வீடு வந்த சேர்ந்த அந்த இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரண்டு குற்றவாளிகளையும், பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.குற்றவாளிகளில் ஒருவன் 5 அடி 10 அங்குலத்தில் கருப்பு நிறத்திலும், கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தான் என்றும், மற்றவன் 5 அடி 6 அங்குல உயரத்தில் கருப்பு நிற உடையணிந்திருந்தான் என்றும் இருவருமே 18 வயதுடையவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி