செய்திகள் காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…

காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்…

காதலனை பார்க்க போலி பாஸ்போர்ட்டில் பாகிஸ்தான் சென்ற பெண்… post thumbnail image
லாகூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் நகிதா ரமேஷ். இவர் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரை சேர்நத ஆஸார் என்பவரை இண்டெர்நெட் மூலம் காதல் கொண்டார்.

காதலின் அடுத்த கட்டமாக காதலனை சந்திப்பதற்காக கத்தார் நாட்டின் தோஹா விமான நிலையத்தில் இருந்து லாகூர் விமானநிலையத்திற்கு வந்தார். முன்னதாக தனது வருகையை காதலரிடம் தெரிவித்திருந்தார் நகிதா. லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அவர் போலி பாஸ்போர்ட் மூலம் வந்தது கண்டறியப்பட்டது.

இருப்பினும் அவர் தான் முஸ்லிமாக மாறி விட்டதாகவும் கூறினார். ஆனால் பாஸ்போர்ட்டில் நிம்ரா என்று பெயர் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் முல்தான் நகருக்கு செல்வதற்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி