அரசியல்,செய்திகள் பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…

பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி…

பொருளாதார நிலை மோசமானதற்கு மத்திய அரசே காரணம்-மோடி… post thumbnail image
காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) கூட்டம் நடைபெற்றது. அதில், குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய ஆட்சியே காரணம். கட்டமைப்புகள் வந்தபோதிலும், அவை எரிசக்தியை சார்ந்து இருக்கின்றன.
ஆனால், எரிசக்தி இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதற்கு யாராவது பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், யாருமே பொறுப்பு ஏற்பது இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.திட்டமிடல் இல்லாததால், குறைவான சாதனை புரிந்தவர்களை கொண்ட நாடாக இந்தியா மாறிவிட்டது. இந்த நிலைமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாம் நன்கு திட்டமிட்டால், மிகப்பெரிய உயரத்தை அடையலாம். தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாத நிலை காணப்படுகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். ஆனால், கல்வி மூலம் ஏழைகளின் தகுதியை உயர்த்தாவிட்டால், இது எப்படி சாத்தியம் ஆகும்? நாம் கனிமங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தால், வேலைவாய்ப்பையோ, வளர்ச்சியையோ உருவாக்க முடியாது.தற்போதைய 21-வது நூற்றாண்டு பிறப்பதற்கு முன்பு, எல்லோரிடமும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால், 21-வது நூற்றாண்டுக்கான வியூகம் இன்னும் வகுக்கப்படவில்லை.வேளாண் துறையும், சேவைத்துறையும் மிகவும் முக்கியமானவை. வேளாண் உற்பத்தியை பெருக்க கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மக்கள் தொகை பெருகும் அதே நேரத்தில், நிலத்தின் பரப்பு சுருங்கி வருகிறது. வளர்ச்சியில் சாதாரண மக்களையும் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும். நிறைய சிறுதொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும்.

நமது இளைஞர்களால் செய்ய முடிந்த வேலைகளுக்கு நாம் வெளிநாட்டு ஆட்களை நியமித்து, கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி