விளையாட்டு விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…

விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்…

விவசாயிகளை துன்புறுத்தும் போலீஸ்… post thumbnail image

நெல் அறுவடை இயந்திரம், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்,மீது போலீசார் சோதனை செய்தன. பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு, வாகன சோதனை நடந்தது. பல அப்பாவி விவசாகிகளின் இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது.

வேளாண் தொழில் அதிகம் உள்ள தமிழகத்தில், விவசாயம் சார்ந்த கருவிகள் மற்றும் கால்நடைகளை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல, லாரி உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் பணிக்கு நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர் பயன்படுத்தப்படுகின்றன. ஆடு, மாடுகளை, சந்தைகளில் விற்கவும் வாகனங்களில் ஏற்றிச் செல்வது அதிகரித்துள்ளது.வேளாண் கருவிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் செல்லும் போது, டிராபிக் போலீசார், ரோந்து பிரிவு போலீசார் வாகனங்களை, ஆய்வு என்ற பெயரில் நிறுத்தி, விவசாயிகளை மிரட்டி பணம் வாங்குகின்றனர்..

நேரடியாக வசூலில் இறங்காமல், போலீஸ் நண்பர்கள் குழுவினர், ஊர்க்காவல் படையினரையும், பயன்படுத்தி சிறு விவசாயிகளிடம், கூடுதல் கட்டணமாக என்று கூறி வசூலித்து வருகின்றன.

போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது: தற்போது மணல் வண்டி எண்ணிக்கை குறைந்து விட்டது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரி, உரிய அனுமதி இல்லாமல் செல்லும் லாரிகள் மற்றும் கார்களை பிடித்து ஆய்வு செய்தால், ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

போலீசார், அப்பாவி விவசாயிகளிடம் வசூல் செய்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், ரோந்து பிரிவு போலீசார் தங்களுக்கு தொடர்பில்லாத, வாகனச் சோதனையை செய்ததால், உளுந்தூர்பேட்டை அருகே ஏழு பேர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.எனவே வாகன சோதனையை, எந்த பிரிவு போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களுக்கு உரிய அனுமதி இருப்பதையும், போலீஸ் துறை உறுதி செய்தால், அப்பாவி பொதுமக்கள் பாதிப்பையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி