செய்திகள் பாதாம் பால் கிர் !…

பாதாம் பால் கிர் !…

பாதாம் பால் கிர் !… post thumbnail image

பாதாம் – 1/4 கப்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 4 கப்
பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – 1/8 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பாதி பாதாமை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ள பாதாமை பாலில் 30 நிமிடம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கி வைத்துள்ள பாதாமை சேர்த்து பொன்னறிமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதில் சோள மாவு சேர்த்து லேசாக கிளறி, பின் தண்ணீரை மெதுவாக ஊற்றி தொடர்ந்து கெட்டி சேரவிடாமல் கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையான நன்கு கொதித்ததும், அதில் பால் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாமை சேர்த்து, உப்பு, மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்,

கடைசியாக அதில் குங்குமப்பூவை தூவினால், சுவையான பாதாம் சூப் தயார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி