செய்திகள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …

இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை …

இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை … post thumbnail image
காஞ்சிபுரம்‎:-காஞ்சிபுரம்‎ போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வயர்லெஸ் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மணிவேலன். இவர் வீடு காஞ்சிபுரம்‎ ஒரிக்கை ரவி நகரில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு மணிவேலன் தனது மனைவியுடன் பெங்களூரில் இருக்கும் மகனை பார்க்க சென்றார்.

இன்று காலை மணிவேலன் மட்டும் ஊர் திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 15 சவரன் தங்க நகை ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து காஞ்சிபுரம்‎ தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் விரைந்தனர். கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தீவிர வீசாரணை நடந்து வருகிறது.போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே கொள்ளையர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி