செய்திகள் “இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

“இரண்டு” மணி நேரத்தில் புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

“இரண்டு” மணி நேரத்தில்  புதிய சாதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்! post thumbnail image
புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சியில் மருத்துவ ஆய்வில் வியத்தகு சாதனை படைத்துள்ளன ஆராய்ச்சியாளர்கள்.

உயிர்கொல்லி நோயான “புற்றுநோய்க்கு” இலக்கானவர்களுக்கு “மரணத்தை தவிர மருந்து ஏதும் இல்லை” என பேசப்பட்டு வந்த பழைய வேதாந்தம் இதன் மூலம் முறியது.

மார்பக புற்று நோய் என்பது மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்நோயால் தாக்கப்பட்ட கோடிக்கணக்கான பெண்களின் ஆயுட்காலத்தின் பெரும்பகுதி பயத்திலும், வலியிலும், தான் கழிந்து வந்தன.
நோய் கிருமிகள் மனித உடலுக்குள் வேகமாக பரவி ரத்த அணுக்களை சிதைத்து அழிப்பதே புற்று நோய் காரணம் என்று கூறினர்.

இவ்வகையிலான புற்றுக் கட்டியில் இருக்கும் கிருமிகள் வேகமாக பரவுவதை தடுக்கும் தீவிர ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள “கார்னெல்” மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். பல ஆண்டு கால உழைப்புக்கு தற்போது முதல்கட்ட பலன் கிடைத்துள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனித ரத்தம் மற்றும் எலிகளின் ரத்தத்தில், ஒட்டும் தன்மை கொண்ட ஒருவித ‘நானோ’ துகள்களை செலுத்தி ஆய்வு செய்ததில் அதிசயிக்கத்தக்க வகையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம் “புற்றுக் கிருமிகள்” வேறு இடத்திற்கு பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதுடன் புற்று கிருமிகளும் கொல்லப்பட்டன. “இரண்டு ” மணி நேரத்திற்குள் இந்த அரிய மாற்றம் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

இந்த முதல்கட்ட ஆய்வு இன்னும் பலகட்ட சோதனைகளையும் மேம்பாடுகளையும் கடந்து, வெற்றிகரமான செயல் வடிவத்தை பெறும் போது புற்று நோய் சார்ந்த மரணங்கள் முற்றிலுமாக குறைந்து விடும் என்பதை உறுதியாக நம்பலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி