இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் துபாயில் இந்தியருக்கு “திர்ஹாம் பரிசு “!!!..

துபாயில் இந்தியருக்கு “திர்ஹாம் பரிசு “!!!..

துபாயில் இந்தியருக்கு “திர்ஹாம் பரிசு “!!!.. post thumbnail image
கேரளாவை சேர்ந்த “பசாலுதீன் குட்டிபலக்கல்” என்பவர் கடந்த 10 வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இவர் ஒரு தையல் தொழிலாளி. தொடர்ந்து 10 வருடங்களாக பரிசு சீட்டு வாங்கி குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டுள்ள அவர் இவ்வருடம் கண்டிப்பாக பெரிய பரிசு தொகையை பெறும் நோக்கில் லாட்டரி சீட்டினை வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் இரு உயர்தர “இன்பினிட்டி வகை கார்கள்” மற்றும் “ரொக்க பரிசு தொகையாக ஒரு லட்சம் திர்ஹாம் (ரூ.16.9 லட்சம்)” ஆகியவற்றை பெற்றுள்ளார்.

அவருக்கு 3 தினங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. அதன் அதிர்ஷ்டமாக இந்த பரிசு தொகை தனக்கு கிடைத்து உள்ளது எனக் கூறினார். மேலும், இந்த முறை தனக்கு பரிசு கிடைக்கும் என தான் கருதியதாகவும், பரிசு பெற்றதை தன்னிடம் தெரிவித்தவுடன் தான் ஆச்சரியமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த புத்தாண்டு தனக்கு மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். பரிசு பணத்தில், தனது நண்பர்களுக்கு உதவி செய்வதாகவும், குடும்பத்தினருக்கும் உதவிடவும் மற்றும் கேரளாவில் உள்ள வீட்டை சீரமைக்கவும் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி