இதர பிரிவுகள்,செய்திகள்,முதன்மை செய்திகள் “கோமா”விலிருந்து மீண்டார் “இந்தியர்” !!!…

“கோமா”விலிருந்து மீண்டார் “இந்தியர்” !!!…

“கோமா”விலிருந்து மீண்டார் “இந்தியர்” !!!… post thumbnail image
“மன்வீந்தர் சிங்” தனது இரு நண்பர்களுடன் மெல்போர்ன் நகரில் உள்ள பிர்ரா ரங் பூங்காவின் நடைபாதையில் நின்றிருந்த போது ஆப்பிரிக்கர் போல் தோற்றம் கொண்ட 8 பேர் உள்பட ஒரு பெண்ணும் சேர்ந்து கடுமையாக தாக்கினர்.

அவரது முகத்தில் குத்தி கீழே தள்ளி அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அங்குள்ள ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் கோமா நிலையில் உள்ளதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

கடந்த ஒரு வாரமாக சுய நினைவை இழந்த நிலையில் உயிருக்குப் போராடி வந்த மன்ராஜ்விந்தர் சிங்குக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சையின் பலனாக அவர் இன்று “கோமா” நிலையில் இருந்து விடுபட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி