தேனி:- உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் காராமணி. இவருடைய மகன் ஜெயராஜ். சம்பவத்தன்று இவர் தோட்டத்துக்கு பூச்சி மருந்து அடிக்கச் சென்றார்.
அவர் பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த மருந்தை சுவாசித்துள்ளார்.இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜெயராஜ், கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி