செய்திகள்,முதன்மை செய்திகள் செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …

செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் …

செவ்வாய்க்கு செல்லும் இந்தியர்கள் … post thumbnail image
லண்டன்:- செவ்வாய் கிரகத்தில், உயிர் வாழ முடியுமா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ஆராய்ச்சி தொடர்கிறது. இதற்காக, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், விண்கலங்களையும், செயற்கை கோள்களையும் அனுப்பி, ஆய்வு செய்கின்றன.

இந்நிலையில், நெதர்லாந்தைச் சேர்ந்த, தனியார் விண்வெளி நிறுவனம், ‘தி மார்ஸ் ஒன்’ என்ற புதிய திட்டத்தைத் துவங்கியுள்ளது.திட்ட தலைமை அதிகாரி, பாஸ் லேன்ஸ் டார்ப் கூறியதாவது:செவ்வாய் கிரகம் செல்ல விரும்பும் மக்கள், அங்கு நிரந்தரமாக குடியேற்றப்படுவர்; அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாது. இத்திட்டம் வரும், 2024ல் துவங்கப்படும்.இணையதளத்தில், நாங்கள், இந்த அறிவிப்பை வெளியிட்ட பின், 140 நாடுகளைச் சேர்ந்த, 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில், நிரந்தரமாகத் தங்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் மட்டும், 20 ஆயிரம் பேர்.

செவ்வாய் கிரகத்துக்கு செல்லக்கூடிய மனத்திடம், உடல் திறன், பணம் செலுத்தும் தகுதி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, 297 பேரை மட்டும் தேர்வு செய்துள்ளோம். இவர்களில், இந்தியர்கள், 62 பேர் தகுதி பெற்றுள்ளனர்.செவ்வாய் கிரகத்துக்கு, எங்கள் நிறுவனத்தின் சார்பில், 2018ல், ஆளில்லா விண்கலம் அனுப்ப உள்ளோம். 2024ம் ஆண்டிலிருந்து, இரண்டு ஆண், இரண்டு பெண் என, நான்கு பேராக ஒவ்வொரு பயணத்திலும், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு லேன்ஸ் டார்ப் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி