செய்திகள்,முதன்மை செய்திகள் மாமியாரை அடித்த மருமகள் …

மாமியாரை அடித்த மருமகள் …

மாமியாரை அடித்த மருமகள் … post thumbnail image
பேரளம் அருகே விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்யாணி (65). இவர்களது மகன் சாமிநாதன். இவருக்கும், சத்யா (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுக்கும் முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் பெற்றோர்களை பிரித்து சாமிநாதன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். பின்னர் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது, சாமிநாதன் வாங்கிய மோட்டார் சைக்கிளை பெற்றோர் வீட்டில் கொடுத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.அந்த மோட்டார் சைக்கிளை சத்யா எடுத்து வர மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு கல்யாணி மட்டும் வீட்டில் இருந்தார். எனது கணவர் வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை என்னிடம் கொடுங்கள் என்று கல்யாணியிடம் சத்யா கூறினார்.

இதற்கு கல்யாணி மறுத்துவிட்டார். இதனால் மாமியாருக்கும், மருமகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சத்யா அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் கல்யாணியின் மண்டையில் அடித்தார்.
பலத்த காயம் அடைந்த கல்யாணி அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பேரளம் போலீசில் கல்யாணி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவுச் செய்து சத்யாவை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி