செய்திகள்,முதன்மை செய்திகள் கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…

கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…

கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது… post thumbnail image
கோவை பீளமேடு சவுரிபாளையம் இந்திராநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரங்கசாமி. இவரது மனைவி பரமேஸ்வரி (வயது40). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் பரமேஸ்வரிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிவேல்ராஜ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

4 வருடமாக தொடர்ந்த இவர்களின் கள்ளக்காதல் சமீபத்தில்தான் ரங்சாமிக்கு தெரியவந்தது. இதனால் அவர் ஆத்திரமடைந்தார். நமக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் கருதியாவது கள்ளத்தொடர்பை கைவிடு என்று எச்சரித்தார்.ஆனால் பரமேஸ்வரி கணவரின் பேச்சை கண்டு கொள்ளவில்லை. கள்ளக்காதலர்கள் தங்கள் விரும்பம்போல் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்த பரமேஸ்வரி கள்ளக்காதலனுடன் சேர்ந்தார். இருவரும் கணவன் மனைவியை போன்று வாழ்ந்தனர். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த மணிவேல்ராஜ் கண்டித்தார். கணவரின் பேச்சை கேட்காதது போல் கள்ளக்காதலனின் பேச்சையும் பரமேஸ்வரி கேட்கவில்லை.

இதற்கிடையே மணிவேல்ராஜ் வேறு ஒரு பெண்ணிடம் பேசிவந்தார். இதில் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி மணிவேல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டார்.சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிவேல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து பரமேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென பற்றி எரிந்தது. வேதனை தாங்காமல் பரமேஸ்வரி அலறித்துடித்தார்.அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவேல்ராஜை கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி