செய்திகள்,முதன்மை செய்திகள் 4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை…

4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை…

4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை… post thumbnail image
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மாமுண்டி. விவசாயியான இவரது மனைவி விஜயா(வயது 29). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் விஜயா மீண்டும் கருவுற்றார். கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 2 கைகளும், 2 கால்களும், வயிற்று பகுதியில் வளர்ச்சியடையாத நிலையில் உடலின் பின்பகுதியும் அதில் 2 கைகளும், 2 கால்களும் இருந்தது. இதனை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 குழந்தைகள் ஒட்டி பிறந்ததில் ஒரு குழந்தைக்கு ஜீன்கள் சரியாக வளராதது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஆண் குழந்தையை நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் இன்குபேட்டரில் அந்த ஆண் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் வயிற்று பகுதியில் தலை மற்றும் உடல் இல்லாமல் ஒட்டியுள்ள 2 கை, 2 கால்கள் மற்றும் உடலின் பின்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி