செய்திகள்,முதன்மை செய்திகள் போதையில் விரலை கடித்து துப்பிய வாலிபர் …

போதையில் விரலை கடித்து துப்பிய வாலிபர் …

போதையில் விரலை கடித்து துப்பிய வாலிபர் … post thumbnail image
புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது47). கூலி தொழிலாளி. இவரது நண்பர் முருகையன் (35). இவர் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள சாராய கடை ஒன்றுக்கு குடிக்க சென்றனர்.

பின்னர் அவர்கள் போதை அதிகமானதை தொடர்ந்து அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த முருகையன் திடீரென்று மாயகிருஷ்ணனின் ஒரு விரலை கடித்து துண்டாக்கி துப்பி விட்டார். இதனால் ரத்தம் சொட்ட, சொட்ட மாயகிருஷ்ணன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி