செய்திகள்,முதன்மை செய்திகள் ஓடும் பஸ்ஸில் நகை அபேஸ் …

ஓடும் பஸ்ஸில் நகை அபேஸ் …

ஓடும் பஸ்ஸில் நகை அபேஸ் … post thumbnail image
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் உள்ள கழனிவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி சரிசா. சம்பவத்தன்று இவர் கண்டனூரிலிருந்து, காரைக்குடிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பையில் 40 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பயணித்தனர்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சரிசா நின்று கொண்டே பயணம் செய்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமி, சரிசாவின் நகை, பணம் இருந்த பையை நைசாக ‘அபேஸ்’ செய்து கொண்டு தப்பினார்.காரைக்குடி பஸ் நிலையத்தில் சரிசா இறங்கிய போது அவரிடம் இருந்த நகை– பணம் இருந்த பை காணவில்லை. பஸ்சில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்த அவர் காரைக்குடி போலீசில் புகார் செய்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி