திரையுலகம்,முதன்மை செய்திகள் தொல்லை ரசிகனுக்கு ஆப்பு வைத்த நடிகை …

தொல்லை ரசிகனுக்கு ஆப்பு வைத்த நடிகை …

தொல்லை ரசிகனுக்கு ஆப்பு வைத்த நடிகை … post thumbnail image
கன்னட படங்களில் நடிக்கும் முன்னணி நடிகையான சஞ்சனாவுக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சஞ்சனாவை காண அவர்கள் முண்டியடிப்பது உண்டு. இவருக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தான்.

நள்ளிரவில் மொபைல் போனில் சஞ்சனாவிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்தான். இதனால் சஞ்சனா நிம்மதி இழந்தார். ஒரு கட்டத்தில் அவன் நம்பர் வரும்போது பேசாமல் தவிர்த்தார்.ஆனாலும் அந்த நபர் வீட்டின் மற்ற போன் நம்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்தான். போலீசிடம் புகார் அளிக்காமல் அவனை நூதனமாக பழி வாங்க சஞ்சனா திட்டமிட்டார்.அதன்படி செக்ஸ் தொல்லை கொடுத்தவனின் மொபைல் போன் நம்பரை டுவிட்டரில் வெளியிட்டார்.

இந்த போன் நம்பருக்குரிய நபர் தினமும் நள்ளிரவில் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார்.எனது உண்மையான ரசிகர்கள் அந்த நபருக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
உடனடியாக ரசிகர்கள் அந்த போனில் தொடர்பு கொண்டனர். மர்ம நபரை கேவலமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்கள். கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.இதனால் ஆபாசமாக பேசி வந்த நபர் அஞ்சி நடுங்கினான். சஞ்சனாவுக்கு போன் செய்து ‘என்னை மன்னித்து விடுங்கள்’ இனிமேல் ஆபாசமாக பேசமாட்டேன் என் மொபைல் நம்பரை டுவிட்டரில் இருந்து நீக்கி விடுங்கள் உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என்று கெஞ்சி அழுதான். அந்த நம்பரை நீக்குவதா வேண்டாமா என்று சஞ்சனா யோசித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி