திரையுலகம்,முதன்மை செய்திகள் தல வீட்டில் மர்ம நபர்கள்

தல வீட்டில் மர்ம நபர்கள்

தல வீட்டில் மர்ம நபர்கள் post thumbnail image
நடிகர் அஜீத்தின் வீடு, சென்னை திருவான்மியூரில் உள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2 மர்ம வாலிபர்கள், அஜீத்தின் வீட்டு முன்பக்க இரும்பு கதவை தட்டினார்கள். நாங்கள் தலய பார்க்கணும்,என்று சத்தம் போட்டு கலாட்டா செய்தார்கள். வீட்டு காவலாளி அஜீத் வெளியில் சென்றுள்ளார். பகலில் வாருங்கள் என பதில் அளித்தார். ஆனால் அவர்கள் போதையில் இருந்ததால் வீட்டின் முன் ரகளை செய்தனர்.

அப்போது வெளியில் சென்றிருந்த நடிகர் அஜீத் காரில் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் ரகளை செய்தவர்கள் உற்சாகமாகிவிட்டனர். தல வந்துட்டார், தல வந்துட்டார், என கூச்சலிட்டபடியே காருக்கு பின்னால் வீட்டுக்குள் ஓடினார்கள். காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் அஜீத் காரைவிட்டு இறங்கி வீட்டுக்குள் போய்விட்டார்.

அங்கு வந்த போலீஸ்சார் அவர்களை அழைத்து சென்றனர்.அவர்கள் அஜித்தின் ரசிகர்கள் எனவும்,அவரை பார்க்க வந்ததாகவும் கூறினர்.அவர்கள் தப்பான நோக்கத்தில் அஜீத் வீட்டிற்கு வரவில்லை என்று தெரியவந்ததாலும் அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கப்படாததாலும் எச்சரித்து விடுவித்து விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி