திரையுலகம்,முதன்மை செய்திகள் சிக்கிய ஹீரோ … உடைந்தது கேரவன் கதவு…

சிக்கிய ஹீரோ … உடைந்தது கேரவன் கதவு…

சிக்கிய ஹீரோ … உடைந்தது கேரவன் கதவு… post thumbnail image
நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்ய பிரபாகர் இயக்கும் இதில், ஸ்ரீகாந்த் ஜோடியாக நீலம் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்ட ஸ்ரீகாந்த், மதியம் சாப்பிடுவதற்காக கேரவனுக்குள் சென்றார். சாப்பிட்டு முடிந்து அவர் வெளியே வர முயன்றபோது கதவு திறக்கவில்லை.கேரவன் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது.

நீண்ட நேரமாகப் போராடியும் கதவு திறக்காததால், வெளியே இருந்த உதவியாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வெளியில் இருந்து கதவை திறந்து பார்த்தனர். முடியாததால் வேனுக்குள் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்த் தவித்தார். படக்குழுவினர் அனைவரும் அங்கு கூடி கேரவனின் கதவை உடைத்து ஸ்ரீகாந்தை மீட்க முடிவு செய்தனர். பிறகு கதவை உடைத்து அதில் சிக்கிக்கொண்ட ஸ்ரீகாந்தை மீட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி