திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘அவன்-இவன்’ லேட்டுக்கு காரணம் விஷாலாம்!

‘அவன்-இவன்’ லேட்டுக்கு காரணம் விஷாலாம்!

vishal

‘அவன்-இவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் ஆரம்பித்து விட்டது. அதே சமயத்தில் படம் சம்மந்தமான சுவாரஸ்யமான் தகவல்களும் வெளிவரத்துவங்கியுள்ளது. இதில் ஆர்யா, விஷால் இருவரும் ஹீரோக்களாக நடித்திருந்தாலும், விஷாலுக்கு கொஞ்சம் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் விஷாலின் கதாபாத்திரம் பெண்மைத்தனம் கலந்த ஒரு ஆண் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிலும் அவர் ஒன்றரை கண்! குறைபாடு உள்ளவராகவும் நடித்திருக்கிறார்.

இந்த வேடத்தின் ரெஃபரன்சுக்காக இதற்கு முன் இதுபோன்ற வேடத்தில் யாராவது நடித்திருக்கிறார்களா என்று விஷால் தேடி பார்த்திருக்கிறார். உலக மொழிப்படங்கள் உள்ளிட்ட எதிலேயும் யாருமே இப்படி நடிக்க வில்லையாம். அந்த வகையில் உலக சினிமா வரலாற்றில் விஷால் தான் இப்படி ஒன்றரை கண்! வேடத்தில் நடித்திருக்கிறார்.

“இந்த வேடம் நடிப்பது அவ்வளவு சாதரணமான விஷயமும் இல்லை. இப்படி நடிக்கும் போது எட்டு ஷாட்டுக்கு மேல் நடிக்க முடியாது. கண் மங்கலாகி விடுமாம். இப்படி நிறுத்தி நிறுத்தி நடித்ததால்தான் இப்படத்தின் படப்பிடிப்பும் சிறிது காலதாமதம் ஆனாது” என்று தனது அனுபவத்தை விஷால் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.