திரையுலகம் முதன் முறையாக இரட்டை வேடத்தில் விக்ரம்…தேறுமா படம்…

முதன் முறையாக இரட்டை வேடத்தில் விக்ரம்…தேறுமா படம்…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சீயானின் வாழ்க்கையில் திரும்புகிற இடமெல்லாம் வெற்றி இருந்தது ஒருகாலம். இப்போது சுற்றி சுற்றி தேடினாலும் கண்ணாமூச்சு காட்டுகிறது வெற்றி. இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த சீயான் வெற்றிப்பட இயக்குனர்களை தேடி தேடி கவிழ்த்துக் கொண்டிருக்கிறார். சீயானின் வலையில் சிக்கிய அடுத்த மீன், டைரக்டர் சுசீந்திரன்.

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல என்று இரு படங்களில் தனது இருவேறு திறமைகளை காட்டிய இந்த இளம் இயக்குனர் சுசீந்திரன், விக்ரமை பார்த்து ஒரு கதை சொன்னாராம். அது சீயானின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான கதை. இதுவரை 48 படங்களில் நடித்திருந்தாலும், இரட்டை வேடத்தில் நடித்ததில்லை அவர். அந்நியனில் கூட அவருக்கு இருவேடமல்ல.

எந்த ஒரு ஹீரோவும் சக போட்டியாளரையும் மனதில் வைத்துதான் காய் நகர்த்துவார். அந்த வகையில் பார்த்தால் நடிக்க வந்த நாலே படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவிட்டார் கார்த்தி. இவரது சிறுத்தைதான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் கேக். இத்தனை படங்களில் நடித்தும் தனக்கு அப்படியொரு வேடம் அமையவில்லையே என்று ஏங்கிய விக்ரமுக்கு, இப்போது சுசீந்திரன் கொடுத்திருப்பது அட்டகாசமான டபுள் ஷாட்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.