திரையுலகம் “தீடீர் புகழ்” கவர்ச்சி கன்னி சோனா பேட்டி

“தீடீர் புகழ்” கவர்ச்சி கன்னி சோனா பேட்டி

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் தற்போது கனிமொழி என்ற படத்தை டி. சிவாவுடன் இணைந்து தயாரிக்கிறார். அடுத்து இயக்குனராகவும் அவதாராம் எடுக்கிறார்.
சோனா அளித்த பேட்டி வருமாறு:-

கனிமொழி படம் சிறப்பாக வந்துள்ளது. கதை பிடித்ததால் தயாரித்தேன். தத்து வார்த்தமான காதல் கதை. நவீன தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ளது. ஜெய், சாஷன் பத்மஸி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஸ்ரீபதிரங்கசாமி இயக்கியுள்ளார். தொடர்ந்து 2010 பாக்யராஜ் படத்தை தயாரிக்கிறேன். இருபடங்களும் முடிந்ததும் டைரக்டராக முடிவு செய்துள்ளேன்.

எனக்கு எப்போது திருமணம் என்று பலர் கேட்கின்றனர். அது பற்றி சிந்திக்கவே இல்லை. ஆண்களை நான் நம்பமாட்டேன். நண்பர்களை நம்பலாம். ஆனால் புருஷன்களை நம்பக்கூடாது.

நான் வாழ்க்கையை சுய சரிதையாக எழுதும் படி யோசனை சொல்கிறார்கள். அந்த எண்ணம் இல்லை. ஆனால் என் வாழ்க்கையை படமாக எடுக்கும் திட்டம் உள்ளது.

அரசியலில் ஈடுபடும் சிந்தனை இல்லை. ஏதேனும் அரசியல் கட்சி என்னை வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய அழைத்தால் போகமாட்டேன். எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. ஐந்து வருடம் கழித்து அரசியலில் ஈடுபடுவது பற்றி யோசிப்பேன். இவ்வாறு சோனா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி