திரையுலகம் தங்கர் பச்சான் என்ன ஆச்சு?

தங்கர் பச்சான் என்ன ஆச்சு?

thangarbachan

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் யாரெல்லாம் எதற்கெல்லாம் ஆத்திரப்படுவார்களோ தெரியாது. ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளத்தை திரட்டப் போகிறேன் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் தங்கர்பச்சான். நல்ல விஷயம். செய்யட்டும். ஆனால் அவர் கூறியிருக்கும் சில கருத்துக்கள் ரஹ்மான் ரசிகர்கள் மனசில் கொள்ளிக் கட்டையை வைத்து தேய்க்காத குறை.

மக்கள் பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறார்கள் திரையுலகத்தினர். விருது வாங்குவதுதான் பெரிய அங்கீகாரமா? அந்த விருதை வைத்துக் கொண்டு நாக்கு வழிக்க போகிறீர்களா? ஆஸ்கர் விருது கொடுக்கும் போது, ஈழத்தமிழர் வதை படும்போது இதை நான் வாங்க மாட்டேன் என்று சொல்லியிருந்தால் தமிழனின் பிரச்சனை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் என்கிறார் தங்கர் பச்சான்.

ஈழத்தமிழர் வேதனையை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்தான். ரஹ்மான் பெற்ற ஆஸ்கர் விருதை புலம் பெயர்ந்த தமிழர்களே பெருமையோடு நினைக்கும் போது இடையில் தங்கர் ஏன் குழப்பியடிக்கிறாரோ, அவருக்கே வெளிச்சம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி