சிம்பு நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தமிழ், தெலுங்கு மொழியில் இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தற்போது புதுமுகம் வீரா நடிக்கும் ‘நடுநிசி நாய்கள்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். க்ரைம் – த்ரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் பாடல்கள் கிடையாது.
மறைந்த பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி, பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளில் புகழ்பெற்ற கவிதையொன்றின் பெயர் ‘நடுநிசி நாய்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு பிறகு இந்தியில் உருவாக உள்ள ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தையும் இயக்க உள்ளார். இதன் நடுவே சுசீந்திரன் இயக்கத்தில் ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தை தயாரித்து வருகிறார்.
இயக்கம், தயாரிப்பு ஒரு புறம் இருக்க நடிப்பிலும் களம் இறங்கியிருக்கிறார். அவர் தற்போது ஒரு பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘போடா போடி’. சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்காக லண்டன் சென்று பத்து நாள் தங்கியிருந்து நடித்திருக்கிறார். இனி அவருடைய படங்களிலும் தொடர்ந்து நடிப்பார் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி