திரையுலகம் எந்திரன் அலையில் ரத்த சரித்திரா ரசிகர்களை திருப்திப்படுத்துமா?

எந்திரன் அலையில் ரத்த சரித்திரா ரசிகர்களை திருப்திப்படுத்துமா?

surya

ரத்த சரித்திரா வந்தால் மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பெஷல் ஃபிளைட் பிடித்து அங்கிருக்கிற எல்லா தயாரிப்பாளர்களும் வந்துவிடுவார்கள். அத்தனை பேருக்கும் எப்படிதான் கால்ஷீட் கொடுக்க முடியுமோ சூர்யாவால்? என்றெல்லாம் கவலைப்பட்ட அவரது ரசிகர்கள் மேற்படி ட்ரெய்லரை பார்த்தால் ஆடிப்போய் விடுவார்கள். அடுத்த வாரம் ரிலீஸ் ஆகப் போகிறது ரத்த சரித்திரா. போஸ்டர், டி.வி.பிரமோஷன், வானொலி விளம்பரங்கள் என்று எதை திருப்பினாலும் விவேக் ஓபராயின் வடிவம்தான். ஒரு ஸ்டாம்ப் சைசுக்கு கூட சூர்யாவின் படங்கள் இல்லை என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.

படத்தில் கூட பத்து நிமிடம்தான் வருகிறாராம் சூர்யா. அப்படியிருக்க அவருக்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. உண்மை அப்படியிருக்க, தமிழிலாவது தனது போர்ஷனை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாராம் சூர்யா. அதற்காக வெட்டி போட்ட பிலிம்களை எடுத்து ஒட்டவைக்கும் வேலைகள் நடந்து வருகிறதாம். எல்லாம் முடிந்து படம் திரைக்கு வரும்போது பார்க்கலாம், சூர்யா ரசிகர்களை அது திருப்திப்படுத்துமா என்று!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி