திரையுலகம் 'எந்திரன்' வெற்றிக்கு யார் காரணம்?

'எந்திரன்' வெற்றிக்கு யார் காரணம்?

enthiran003

கேப்டன் ஐசக் தயாரிப்பில் உருவான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. படத்தில் பணிபுரிந்த நாயகன் விஜய் சேதுபதி, நாயகி பேராண்மை வசுந்தரா, பொன் வண்ணன், சரண்யா, வத்திப்பெட்டி கணேசன் இவர்களோடு தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார்.

தயாரிப்பு நிர்வாகத்தை நாச்சியப்பன், பி.டி.செல்வகுமார் இருவரும் கவனித்துள்ளார்கள். பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் முதல் கவிப்பேரரசு வைரமுத்து வரை மண் சார்ந்த இலக்கியச் சுவையோடு பேசியது விழாவுக்கு வந்தவர்களை கவர்ந்தது. ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்திற்கு சன் டிவியின் ஆதரவையும் அரவணைப்பையும் மகிழ்ச்சியோடு தெரிவித்த ‘சன் பிக்சர்ஸ்’ சக்சேனா, ‘தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஒ. கார்டு இல்லாமல் வந்து எந்திரன் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த எந்திரன் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் பி.ஆர்.ஒ.வாக பணியாற்றியதை மறக்க முடியாது’ என்றும் பேசியுள்ளார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி