அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…

லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…

லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!… post thumbnail image
புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற ‘ஷவ்ரியா திவாஸ்’ என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் சென்றார். அவரும், சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜ்ஜு ஆகியோர் லிப்டில் மேல் மாடிக்கு சென்றபோது திடீரென லிப்ட் இயங்காமல் நின்றது. இதையடுத்து லிப்டில் இருந்த அலாரமை அவர்கள் அழுத்தி ஒலிக்க செய்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், மூவரையும் ஒருவர் பின் ஒருவராக லிப்டின் மேற்கூரை வழியாக மேலே தூக்கி மீட்டனர். இதில் கடைசி நபராக ராஜ்நாத் சிங் லிப்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இத்தகவலை ராஜ்நாத் சிங் விழாவில் கலந்து கொண்டபோது சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி