அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால் நேற்று சந்தித்தார். அதே சமயம் பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்க கெஜ்ரிவாலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை கெஜ்ரிவால் சந்தித்தார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான மணிஷ் சிசோடியாவும் உடன் சென்றார்.

அப்போது கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தனது பதவியேற்பு விழாவுக்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். பின்னர் 15 நிமிடம் இருவரும் கலந்தாலோசித்தனர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, பிரதமருடனான சந்திப்பின்போது நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தாகவும் கூறினார்.

அப்போது மத்தியிலும், டெல்லி மாநிலத்திலும் முழு பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசு அமைந்துள்ளது. இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று பேசப்பட்டதாக சிசோடியா மேலும் தெரிவித்தார். கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று பிரதமர் கூறியதாகவும் சிசோடியா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி