செய்திகள்,முதன்மை செய்திகள் காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!… post thumbnail image
காபூல்:-காபூல் விமான நிலையத்திற்குள் மூன்று அமெரிக்கர்கள் ஒரு ஆப்கானியர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் ஆப்கன் விமானப்படைக்கு பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்க பாதுக்கப்புத்துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஆவார்கள்.

நேற்று மாலை நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பற்றி தெளிவாக எதுவும் தெரியாத நிலையில் நேட்டோவின் ஆதரவு பணியகம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆப்கன் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேதற்காக அதன் உறுப்பினர்களில் ஒருவரான சபிஹுல்லா முஜாகித்தே கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி