செய்திகள்,திரையுலகம் என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!…

என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!…

என் பெயரில் மோசடி: நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்!… post thumbnail image
சென்னை:-ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் ஒன்றை நடிகை காஜல் அகர்வால் திறக்கப்போவதாக விளம்பரப்படுத்தப்பட்டது. போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி காஜல் அகர்வால் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். அப்படி ஒரு விழா நடப்பதே தனக்கு தெரியாது என்றும் தன்னை அழைக்காமலேயே விளம்பரத்துக்காக தனது பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதாகவும் ஆவேசப்பட்டார்.

இதுகுறித்து காஜல்அகர்வால் கூறியதாவது:– வணிக வளாகம் ஒன்றை நான் திறந்து வைக்க இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதுமாதிரி விழாவுக்கு வரும்படி யாரும் என்னை அணுகவில்லை. எனக்கு தெரியாமல் அப்படி விளம்பரம் கொடுத்துள்ளனர். என்னிடம் அமைதி பெறாமல் எனது பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எனக்குள்ள மதிப்பை கெடுக்கும் செயலாகும். என்னை எதிர் பார்த்து அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். சுயநலத்துக்காக எனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி