செய்திகள் வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!…

வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!… post thumbnail image
வாரணாசி:-வாரணாசியின் லல்லாபுரா பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேரும் அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே அந்தப் பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்தப் பெண் கடும் தீக்காயங்களின் காரணமாக இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணமான மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி