செய்திகள்,விளையாட்டு 2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

2-வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றய ஆட்டத்தில் முரளி விஜயின் அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் சேர்த்தது. ரஹானே 75 ரன்களுடனும் (122 பந்து, 7 பவுண்டரி), ரோகித் சர்மா 26 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ரகானேவும் ரோகித் சர்மாவும் ஹேசல்வூட்டின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். மேற்கொண்டு 6 ரன்களை சேர்ந்த ரகானே 81 ரன்களில் வெளியேறினார். அதேபோல், சர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.எதிர்பார்க்கபட்ட கேப்டன் தோனியும் 33 ரன்களில் ஹாஸ்லேவுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இந்திய அணி 408 ரன்களுக்கு அனைத்து விகெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி 97 ரன்களுக்கு கடைசி ஆறு விக்கெட்டுகளை இன்று பறிகொடுத்துள்ளது, ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்து வீசிய அறிமுக வீரர் ஹாஸ்லேவுட் 58 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி