அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!… post thumbnail image
நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக ஆந்திர அரசு ரூ.100 கோடி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட முதல்–மந்திரி சந்திர பாபுநாயுடு கோதாவரி சென்றார். கோதாவரி ஆற்றில் 4–வது பாலம் அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர் ராஜ முந்திரியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுடன் அரசுக்கு சொந்தமான சொகுசு பஸ்சில் சென்றார்.
ராஜ முந்திரியை நெருங்கும் போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை கிளப்பியது. உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

பஸ்சில் இருந்த சந்திரபாபு நாயுடு மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கீழே இறங்கினார்கள்.ரேடியேட்டர் சூடாகி தீப்பிடித்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.சந்திரபாபு நாயுடு உள்பட அனைவரும் வேறு வாகனத்தில் ராஜமுந்திரி புறப்பட்டு சென்றனர்.விபத்துக்குள்ளான பஸ் ராஜ சேகர ரெட்டி ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டது. 11 பேர் பயணம் செய்யும் வகையில் பஸ் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர். இதனால் என்ஜின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி