செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…

சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!…

சாதாரண சிகரெட்டுகளை விட இ–சிகரெட்டால் 10 மடங்கு புற்றுநோய் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!… post thumbnail image
டோக்கியோ:-சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து படிப்படியாக விடுபட இ–சிகரெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது ‘எலெக்ட்ரானிக் சிகரெட்’ ஆகும். இதில் இருந்து புகை வராது. ஆனால் உண்மையான சிகரெட்டில் இருந்து வெளிப்படும் புகை போன்று எலெக்ட்ரானிக் நிகோடின் புகை வெளிப்படும். இந்த சிகரெட் பேட்டரியின் சக்தியால் இயங்கக்கூடியது.

இந்த சிகரெட் பிடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இ–சிகரெட் புகையிலையால் தயாரிக்கப்படும் சாதாரண சிகரெட்டை விட 10 மடங்கு புற்றுநோயை உருவாக்கக்கூடியது. இத்தகவலை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள விஞ்ஞானிகள் குழுவை அமைத்தது.

அக்குழு நடத்திய ஆய்வில் சிகரெட்டில் புகையை ஏற்படுத்த நிகோடினுக்கு பதிலாக பார்மஸ்டிகைட் அசிட்டால் டிகைட் போன்ற பல விதமான ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சாதாரண சிகரெட்டின் நிகோடினை விட 10 மடங்கு புற்றுநோயை உருவாக்கும் திறன் படைத்தது. எனவே இ–சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி