செய்திகள்,திரையுலகம் மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24!…

மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24!…

மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24!… post thumbnail image
சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அடுத்து விக்ரம் கே. குமார் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அலை, யாவரும் நலம், தெலுங்கில் மனம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அப்படத்திற்கு 24 என்ற பெயரை வைக்கலாமா என்று பரீசீலித்து வருகின்றனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இப்படத்திற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் விக்ரம் கே.குமார்.
மாஸ் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி