செய்திகள்,திரையுலகம் நகை கடையில் நகை திருடிய பிரபல நடிகை!…

நகை கடையில் நகை திருடிய பிரபல நடிகை!…

நகை கடையில் நகை திருடிய பிரபல நடிகை!… post thumbnail image
சென்னை:-நடிகை சுவஸ்திகா பெங்காலி மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நிறைய படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடி உள்ளார். சிங்கப்பூரில் பெங்காலி மொழி பட விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக சுவஸ்திகா அங்கு சென்று இருந்தார்.

நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவருக்கு திடீரென ஷாப்பிங் போக ஆசை ஏற்பட்டது. அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் சென்றார். நிறைய வித விதமான நகைகளை எடுத்து பார்த்து விலை கேட்டார். அப்போது காது கம்மல் ஜோடி யொன்றை நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம். இது அங்குளள சி.சி.டி.வி.கேமராவில் பதிவானது. பிறகு நகை ஏதும் வாங்காமல் நைசாக வெளியேறினார்.

நகை கடை பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே சுவஸ்திகா சிறை வைக்கப்பட்டார். கம்மலை நான் எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன. என்று தனக்கு தெரியாது என்று சொல்லி கெஞ்சினார். பின்னர் கடை ஊழியர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி