செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…

நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…

நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!… post thumbnail image
சென்னை:-அஞ்சான் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை டீசன்டாக நடித்து வந்தவர்தான் சமந்தா. ஆனால் அஞ்சான் படத்தில்தான் கிளாமராக நடித்தால் மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று சொல்லி அவரை பிகினி உடையணிந்து நடிக்க வைத்தனர். அப்படி நடித்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.படம் தோல்வியடைந்ததோடு அவரது இமேஜையும் டேமேஜ் பண்ணியது.

இந்நிலையில், அவர் நடித்து வெளியாகியுள்ள கத்தி படம் சமந்தாவுக்கு மறுபடியும் நல்லதொரு இமேஜை உருவாக்கியிருக்கிறது. கதைக்கு தேவையானபடி அசத்தலாக நடித்திருக்கிறார் என்று ரசிக கோடிகள் சபாஷ் கொடுத்து வருகின்றனர். அதனால் தமிழில் கத்தி மூலம் முதல் வெற்றியை அடைந்திருக்கும் சமந்தா, ரசிகர்கள் கிளாமரை விட கருத்தாழமுள்ள கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.

இதையடுத்து சமந்தா விடுத்துள்ள செய்தியில், கத்தி படத்தின் விமர்சனமும், எனது நடிப்பு குறித்த கருத்துக்களும் என்னை சந்தோசப்படுத்தியுள்ளன. ஒரு நல்ல படத்தில் நடித்தோம் என்ற திருப்தியில் இருககிறேன். மேலும், ரசிகர்களை கவர கிளாமர் தேவையில்லை. என்பதும் தெளிவாகி விட்டது அதனால் இனிமேல் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி