செய்திகள்,திரையுலகம் திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…

திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…

திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!… post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருதவாக செய்திகள் உலவி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக தம்பதிகள் போல சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. ஆனாலும் இருவரும் காதலை இதுநாள் வரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சமந்தா இன்னும் மூன்று வருடங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இன்னும் மூன்று வருடங்களில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் எனது குழந்தைகளையும் வளர்க்க முடியும். ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிப்பேன்.

அதன்பிறகு சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் சமந்தா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது பற்றிய விவரம் எதையும் அதில் தெரிவிக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி