செய்திகள்,திரையுலகம் தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…

தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!…

தெலுங்கில் ரீமேக் ஆகும் அரிமா நம்பி!… post thumbnail image
சென்னை:-விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் நடித்த ‘அரிமா நம்பி’ படம் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்கி இருந்தார். சிவமணி இசை அமைத்திருந்தார். 50 நாளை தாண்டி ஒடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது: அரிமா நம்பிக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ரீமேக் உரிமைக்காக பலர் அணுகினார்கள். ஒரு நாள் எனது நண்பர் மோகன்பாபு போன் செய்து அரிமா நம்பியின் ரீமேக் உரிமையை கேட்டார்.

மாற்று சிந்தனையே இல்லாமல் உடனே கொடுத்துவிட்டேன். தெலுங்கில் யார் யார் நடிக்கிறார்கள், இயக்குகிறார்கள் என்கிற பொறுப்பை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். மோகன்பாவுவின் மகன் விஷ்ணு மஞ்சு, விக்ரம் பிரபு கேரக்டரிலும், ஹன்சிகா, பிரியா ஆனந்த் கேரக்டரிலும் நடிப்பார்கள் என்ற தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி