தமன்னா வராதது ஏன் என்பது பற்றி குழப்பம் நீடித்தது. பொதுவாக விஐபிக்கள் விழா நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனால் அதற்கான காரணம் பற்றி இணைய தள பக்கத்தில் தெரிவிப்பார்கள். அதன்படி தமன்னா வராததற்கு காரணத்தை அதில் தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. உடல் சோர்வு காரணமாக அவர் மும்பையில் உள்ள வீட்டில் தங்கிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் ‘பாஹுபாலி‘ படத்தை விரைந்து முடிக்கும் பணியில் இயக்குனர் ராஜமவுலி மும்முரமாக இருப்பதால் இதில் நடிக்கும் யாரையும் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லையாம். தமன்னாவுக்கும் அவர் அனுமதி தராததால்தான் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி