செய்திகள்,திரையுலகம் நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…

நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!…

நடிகை தமன்னாவுக்கு தடைபோட்ட இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-டோலிவுட் ஹீரோ மகேஷ்பாபு ஜோடியாக ‘ஆகடு‘ படத்தில் நடிக்கிறார் தமன்னா. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன் நடந்தது. தமன்னாவின் வரவுக்காக பட குழு காத்திருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பட குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். விழா நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு சுவிட்சர்லாந்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் தமன்னா பங்கேற்று நடித்தார். விழாவையொட்டி 2 நாளைக்கு முன்பே பட குழுவினர் திரும்பிவிட்டனர்.

தமன்னா வராதது ஏன் என்பது பற்றி குழப்பம் நீடித்தது. பொதுவாக விஐபிக்கள் விழா நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனால் அதற்கான காரணம் பற்றி இணைய தள பக்கத்தில் தெரிவிப்பார்கள். அதன்படி தமன்னா வராததற்கு காரணத்தை அதில் தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. உடல் சோர்வு காரணமாக அவர் மும்பையில் உள்ள வீட்டில் தங்கிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ‘பாஹுபாலி‘ படத்தை விரைந்து முடிக்கும் பணியில் இயக்குனர் ராஜமவுலி மும்முரமாக இருப்பதால் இதில் நடிக்கும் யாரையும் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லையாம். தமன்னாவுக்கும் அவர் அனுமதி தராததால்தான் விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி