அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!… post thumbnail image
திருவனந்தபுரம்:-கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என கருத்து தெரிவித்தார்.இது தொடர்பாக கேரளாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சுரேஷ்கோபி பேசியபோது, ஆரான்முளா பகுதியில் விமான நிலையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மாநிலத்தின் முதல்–மந்திரியாக இருப்பவர் இதுபோன்ற திட்டங்களை அறிவிக்கும்போது சமூக ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்டு இருக்க வேண்டும்.

உம்மன்சாண்டிக்கு இது தொடர்பாக போதிய ஞானம் இல்லை. அவர் ஞானம் உள்ளவர்களிடம் இதுபற்றி பேசி கருத்துக்களை தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.நடிகர் சுரேஷ்கோபி, முதல்–மந்திரி உம்மன்சாண்டியை பகிரங்கமாக விமர்சனம் செய்தது மாநில மந்திரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கே.சி. ஜோசப் ஆகியோர் சுரேஷ்கோபியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.மாநில இளைஞர் காங்கிரசாரும் நடிகர் சுரேஷ்கோபிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் குதித்தனர். சுரேஷ்கோபியின் உருவ பொம்மையை எரித்தும் அவரது வீடு நோக்கி பேரணியும் நடத்தினர். கடந்த வெள்ளிக்கிழமை சுரேஷ்கோபி நடித்து வெளியான படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து சுரேஷ்கோபி நேற்று வருத்தம் தெரிவித்தார். கேரளாவில் உள்ள ஒரு தனியார் டெலிவிஷன் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:–முதல்–மந்திரி உம்மன்சாண்டியை விமர்சிக்க வேண்டும் என்று இந்த கருத்தை கூறவில்லை. ஆரான்முளா விமான நிலையம் அமைக்கப்படும் முன்பு அது தொடர்பான கருத்துக்களை கேட்டு அறிந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக் கூட்டத்தில் பேசினேன்.எனது பேச்சு அவரையும், அவரது கட்சி தொண்டர்கள் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி