செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!…

கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!…

கறுப்பு பண விவகாரம்: வெளிநாடுகளில் இருந்து 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்தன!… post thumbnail image
புதுடெல்லி:-வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நிதி அமைச்சகம் கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அதன்படி முதல் கட்டமாக 12 நாடுகளில் இருந்து 24,085 ரகசிய ஆவணங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

நியூசிலாந்தில் இருந்து அதிகபட்சமாக 10,372 தகவல்கள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து ஸ்பெயின் (4169), இங்கிலாந்து (3164), சுவீடன் (2404), டென்மார்க் (2145), பின்லாந்து (685), போர்ச்சுக்கல் (625), ஜப்பான் (440), சுலோவெனியா (44) ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் உள்ள கறுப்பு பணம் குறித்த விசாரணையில் அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இறங்கி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி