செய்திகள்,திரையுலகம் நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!…

நடிகை காஜல் அகர்வால் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி!… post thumbnail image
சென்னை:-விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்த பிறகு கமலின் உத்தமவில்லன், உதயநிதியின் நண்பேன்டா ஆகிய படங்களில் காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதையைக் கேட்டு ஓ.கே சொன்ன அவரிடம், பின்னர் சம்பளம் பேசியபோது, ஒன்றரை கோடி தந்தால் மட்டுமே நடிப்பேன். காரணம் நான் விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் கதாநாயகி. அதனால் இந்த தொகைக்கும் கம்மியாக நடித்தால் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னார்.

அதனால். அந்த இரண்டு படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார் காஜல் அகர்வால். அதனால் தமிழில் படமே இல்லாமல் தெலுங்குக்கு சென்ற அவர் அங்குள்ள ராம்சரண், நாக சைதன்யா என இளவட்ட ஹீரோக்களை நாடினார். தங்களது ஆஸ்தான நடிகை காஜல் என்பதால் அவர்கள் இருவரும் தங்களது புதிய படங்களில் அவருக்கு சிபாரிசு செய்ததோடு சம்பளத்தையும் உயர்த்தி விட்டனர். அதனால் தமிழில் ஒரு கோடி வாங்கிய காஜல் இப்போது தெலுங்கில் 2 கோடி வாங்குகிறார்.

இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க முதலில் காஜலைத்தான் கேட்டார்களாம். ஆனால் அவர் தெலுங்கில் 2 கோடி வாங்குகிறேன். தமிழில் அட்லிஸ்ட் ஒன்றரை கோடியாவது தந்தால்தான் நடிப்பேன் என்று கூறி விட்டாராம். அதனால்தான், அவருக்கு பதிலாக மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை புக் பண்ணினார்களாம்.இப்படி சம்பள விசயத்தில் தொடர்ந்து காஜல் பிடிவாதமாக இருப்பதால் அவர் மீது கோலிவுட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் உளளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி