செய்திகள்,திரையுலகம் நடிகை சமந்தாவை முன்வைத்து ஆந்திராவில் வியாபாரமாகும் அஞ்சான்!…

நடிகை சமந்தாவை முன்வைத்து ஆந்திராவில் வியாபாரமாகும் அஞ்சான்!…

நடிகை சமந்தாவை முன்வைத்து ஆந்திராவில் வியாபாரமாகும் அஞ்சான்!… post thumbnail image
சென்னை:-லிங்குசாமியும், சூர்யாவும் இணைந்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பல கதைகள் கேட்ட சூர்யாவுக்கு எந்த கதையிலும் திருப்தி ஏற்படாமல், இந்த கதையை ஓ.கே செய்தார். அதற்கு முக்கிய காரணம், லிங்குசாமி சொன்ன ஆக்சன் ட்ராக். மும்பை தாதாக்களுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சிகள் என்று அவர் கதையை விவரித்த விதத்தைப்பார்த்து அசந்துவிட்ட சூர்யா உடனே கால்சீட்டை அள்ளிக்கொடுத்து நடித்தார்.

இப்போது படத்தையும் முடித்து விட்டார்கள். இறுதிக்கட்ட பணிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே படத்தை பல மொழிகளிலும் வியாபாரம் செய்யும் வேலைகளையும் இன்னொரு பக்கம் முடுக்கி விட்டிருக்கிறார் லிங்குசாமி. அதில் தமிழ்நாடு, கேரளாவைப் பொறுத்தவரை சூர்யாவை முன் வைத்து படத்தை வியாபாரம் செய்தபோதும், ஆந்திராவுக்கு சமந்தாவை முன்வைத்துதான் வியாபாரம் பேசப்பட்டு வருகிறதாம்.அங்கு அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதோடு, சமந்தாவுக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருப்பதால், அஞ்சானில் அவர் வரும் லவ் டிராக்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் லிங்குசாமி.

அதோடு, ஷாட்ஸ், டீசர்ட் என்று அவர் மாடர்னாக்கியவர், பாடல் காட்சிகளில் அசைவ நடிகையாகவும் மாற்றியிருக்கிறார். இதனால், சமந்தா நடித்த படங்களில் இந்த படம் ஆந்திராவில் நல்ல விலைக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்களாம். ஆனால், தமிழ் ஹீரோ நடித்திருப்பதை காரணம் காட்டி சிலர் படத்தின் ரேட்டை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களாம்.அதையடுத்து, தமிழ் ஹீரோ நடித்த படம் என்றாலும் ஆந்திர ரசிகர்ளை கருத்தில் கொண்டு சமந்தாவுக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இப்போது படத்தின் விலையை பேச வேண்டாம். படத்தை பார்த்து விட்டு ரேட் பேசலாம் என்று அவர்களை நிலுவையில் வைத்துள்ளாராம் லிங்குசாமி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி