சென்னை:-நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி இருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, ஏமி ஜாக்சன் இருவரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் காரைக்குடியிலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி